Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : 'பொய் வழக்குகள் போடுவதை, தி.மு.க., விளம்பர அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பொய்யான வழக்குகள் போடுவதை வாடிக்கையாக கொண்ட தி.மு.க., விளம்பர அரசுக்கு, மீண்டும் ஒரு முறை உயர் நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இன்று ஓ.பி.சி., அணியின் மாநில பொது செயலரான சூர்யாவுக்கு ஜாமின் வழங்கியுள்ளது.இதேபோல, புனையப்பட்ட ஒரு பொய்யான வழக்கில் கைதான, மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணியை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மாநில வழக்கறிஞர் அணி எடுத்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.